/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பத்ம விருதுகள் பரிந்துரைக்காக விண்ணப்பம் வரவேற்பு பத்ம விருதுகள் பரிந்துரைக்காக விண்ணப்பம் வரவேற்பு
பத்ம விருதுகள் பரிந்துரைக்காக விண்ணப்பம் வரவேற்பு
பத்ம விருதுகள் பரிந்துரைக்காக விண்ணப்பம் வரவேற்பு
பத்ம விருதுகள் பரிந்துரைக்காக விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 10, 2024 06:55 AM
புதுச்சேரி : பத்ம விருதுகள் பரிந்துரைக்காக புதுச்சேரியில் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் கடந்த 1954ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ என மூன்று வகைகளில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. குடியரசு தினத்தன்று இவ்விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது. குறிப்பாக கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது நலன், குடிமை பணி, வணிக மற்றும் தொழில் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் செய்யப்பட்ட தனித்துவமான சாதனைகள், பணிகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது, சாதி, தொழில், தகுதி அல்லது பால் இன வேறுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தவிர்த்து மற்ற அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இல்லை.
2025ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதிற்கான தகுதியாளர்களை தேர்வு செய்யவதற்கான நாமினேஷன் (விபர குறிப்புகள்) உரிய படிவத்தில், கூடுதல் விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் இயக்குனர், செய்தி மற்றும் விளம்பரத் துறை, 18 பெல்காம் வீதி, புதுச்சேரி-1 என்ற முகவரிக்கு 31.07.2024 முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். உரிய படிவத்தினைhttp://py.gov.inஅல்லதுhttp://info.py.gov.inஎன்ற இணையதளத்தில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
இவ்விருத்திற்கென புதுச்சேரி அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவினரால் தேர்ந்தெடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவர்.
இத்தகவலை செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.