ADDED : ஆக 08, 2024 11:01 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம், புதுநகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி, 47. இவர் காமராஜர் சாலையில் கடை வைத்துள்ளார்.
கடந்த 2ம் தேதி கடை முன்பு தனது பைக் நிறுத்தியிருந்தார். அன்று இரவு கடையை மூடிவிட்டு வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பைக் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
