ADDED : ஜூலை 27, 2024 01:40 AM
அரியாங்குப்பம்: வீட்டில் இருந்த மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்தார்.
முருங்கப்பாக்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி, வயது 16; இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அவரது தாய் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும் போது, அவர் காணாமல் போயிருந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.