/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு புதுச்சேரியில் மூகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு புதுச்சேரியில் மூகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு புதுச்சேரியில் மூகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு புதுச்சேரியில் மூகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு புதுச்சேரியில் மூகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
ADDED : ஜூலை 31, 2024 01:18 AM

புதுச்சேரி:புதுச்சேரி, லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், 7 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அன்புமணி. தனியார் மதுபான குடோன் ஊழியர். இவரது மனைவி கீதா, 49. நேற்று முன்தினம் மாலை 5:45 மணிக்கு, ஆடிமாத கிருத்திகை என்பதால், குறிஞ்சி நகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 9வது குறுக்கு தெரு சந்திப்பு அருகே சென்றபோது, பைக்கில் முகமூடி அணிந்த வந்த இருவரில் ஒருவன் கீதா கழுத்தில் அணிந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 5 சவரன் தாலி செயினை பறித்து ஓடினார். திடுக்கிட்ட கீதா, கூச்சலிட்டபடி ஓடினார். ஆனால், அதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றனர்.
கீதா புகாரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.