Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு  புதுச்சேரியில் மூகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் 

கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு  புதுச்சேரியில் மூகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் 

கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு  புதுச்சேரியில் மூகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் 

கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 5 சவரன் தாலி செயின் பறிப்பு  புதுச்சேரியில் மூகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் 

ADDED : ஜூலை 31, 2024 01:18 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி:புதுச்சேரி, லாஸ்பேட்டை குறிஞ்சி நகர், 7 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அன்புமணி. தனியார் மதுபான குடோன் ஊழியர். இவரது மனைவி கீதா, 49. நேற்று முன்தினம் மாலை 5:45 மணிக்கு, ஆடிமாத கிருத்திகை என்பதால், குறிஞ்சி நகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 9வது குறுக்கு தெரு சந்திப்பு அருகே சென்றபோது, பைக்கில் முகமூடி அணிந்த வந்த இருவரில் ஒருவன் கீதா கழுத்தில் அணிந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 5 சவரன் தாலி செயினை பறித்து ஓடினார். திடுக்கிட்ட கீதா, கூச்சலிட்டபடி ஓடினார். ஆனால், அதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றனர்.

கீதா புகாரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us