Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெயிண்டர் தற்கொலை

பெயிண்டர் தற்கொலை

பெயிண்டர் தற்கொலை

பெயிண்டர் தற்கொலை

ADDED : ஜூன் 11, 2024 05:55 AM


Google News
புதுச்சேரி: கடன் தொல்லையால் பெயிண்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முத்தியால்பேட்டை சோலை நகர் கலைவாணர் வீதியைச் சேர்ந்தவர் முரளிகுமார் 26, பெயிண்டர். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, மனைவி பவானி, ஒரு வயதில் மகள் உள்ளார். முரளிகுமார் அதிகமாக கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் திரும்ப கடனை கேட்க ஆரம்பித்ததால், குடிப்பழக்கத்திற்கு ஆளான முரளி குமார் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தனது வேட்டியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி பவானி கொடுத்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us