/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீட்டு மனையை அதிக விலைக்கு விற்று தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி வீட்டு மனையை அதிக விலைக்கு விற்று தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி
வீட்டு மனையை அதிக விலைக்கு விற்று தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி
வீட்டு மனையை அதிக விலைக்கு விற்று தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி
வீட்டு மனையை அதிக விலைக்கு விற்று தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 27, 2024 04:52 AM
புதுச்சேரி: வீட்டு மனையை அதிக விலைக்கு விற்பனை செய்து தருவதாக கூறி ஏமாற்றிய ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் அவரது மனைவி, பெண் ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி திலகர் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ராஜேஸ்வரி. 52; இவர்களுக்கு சொந்தமாக ரெயின்போ நகர், முதல் தெருவில் 1200 சதுரடி மனை உள்ளது. இவர்களுக்கு புதுச்சேரி பிராபர்ட்டிஸ் என்ற ஏஜென்சி நடத்தி வரும், ரெட்டியார்பாளையம் காவேரி நகர், தாமோதரன், அவரது மனைவி ஜிப்மோல் இருவரும், ராஜேஸ்வரிக்கு அறிமுகம் ஆகினர்.
தாமோதரன் வங்கியில் கடன் பெற்று தருதல், வங்கிகள் ஏலம் விடும் சொத்துக்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இருவரும் ராஜேஸ்வரியை சந்தித்து தங்களிடம் உள்ள வீட்டு மனையை கொடுத்தால், அதனை விற்பனை செய்து, நகர பகுதியில் 3 மடங்கு அதிக மதிப்புள்ள இடத்தை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.
இதனை நம்பி ராஜேஸ்வரி, தனது ரெயின்போ நகர் வீட்டு மனையை ரூ. 60 லட்சத்திற்கு விலை பேசினர். முன் பணமாக ரூ. 30 லட்சம் கொடுத்தனர். மீத பணம் கிரயம் செய்த பின்பு 2 மாதத்தில் வழங்குவதாக உறுதி அளித்தனர்.
அதனை ஏற்று தாமோதரன் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஜானகி பெயரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பத்திர பதிவு நடந்தது. மீததொகை ரூ. 30 லட்சம் 2 மாதத்தில் தருவதாக கூறியும் வழங்கவில்லை. பல மாதங்கள் கேட்டும் பணம் தராமல் தம்பதி இருவரும் ஏமாற்றி வந்தனர். விசாரணையில் தாமோதரன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து, ராஜேஸ்வரியிடம் வாங்கிய வீட்டு மனையை அண்ணா நகரைச் சேர்ந்த நபரிடம் ரூ. 1.3 கோடிக்கு அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளது.
பணம் தர மறுத்து தன்னை ஏமாற்றி வரும் தாமோதரன் உள்ளிட்டோர் மீது ரெட்டியார்பாளையம் போலீசில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். போலீசார் தாமோதரன், அவரது மனைவி ஜில்மோல், ஊழியர் ஜானகி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.