Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை 

கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை 

கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை 


ADDED : மே 06, 2024 05:29 AM

Follow on Google

ADDED : மே 06, 2024 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : கடன் தொல்லையால் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி, சண்முகாபுரம், வி.பி.சிங் நகர், காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் ராஜா; டிரைவர். இவரது மனைவி பிரேமா (எ) வள்ளி, 27. இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

ராஜா சென்னையில் தங்கி வேலை செய்கிறார். பிரேமா, மூலக்குளம் பெட்ரோல் பங்க் அருகில் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார்.

பிரேமாவுக்கும், இரும்பை கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. நேற்று முன்தினம் மாலை பிரேமா வீட்டிற்கு வந்த சதிஷ், கடன் தொகையை கேட்டு வாக்குவாதம் செய்துவிட்டு சென்றார்.

அடுத்த சில நிமிடத்தில் வீட்டிற்குள் சென்ற பிரேமா வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அவரது மகள், அதே பகுதியில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பிரேமாவின் தாய் ஜெயந்தியை அழைத்து வந்தார். கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்தது. உறவினரை வரவழைத்து கதவை உடைத்து பார்த்தபோது, பிரேமா மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap