ADDED : மே 04, 2026 10:11 PM
புதுச்சேரியில் நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், சில தொகுதிகள் சுற்றுக்கு சுற்று முன்னிலை மாறி, மாறி வந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
திருபுவனை (தனி) தொகுதியில் முதல் இரு சுற்றுகளில் என்.ஆர்.காங்., கோபிகா முன்னிலை வகித்தார். அடுத்த இரு சுற்றுகளில் த.வெ.க., சாய் சரவணன்குமார் 701 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
இதேபோன்று, காலாப்பட்டு தொகுதியில் முதல் சுற்றில் பா.ஜ., கல்யாணசுந்தரம் வகித்த நிலையில், அடுத்தடுத்த 5 சுற்றுகளில் தி.மு.க., வேட்பாளர் செந்தில் கூடுதல் ஓட்டுகள் பெற்று 447 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதேபோன்று, இந்திரா நகரில் முதல் சுற்றில் என்.ஆர்.காங்., ஆறுமுகம் முன்னிலை வகித்த நிலையில், அடுத்த இரு சுற்றுகளில் த.வெ.க., முருகன் முன்னிலை வகித்தார். இறுதி சுற்றில், 584 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆறுமுகம் வெற்றி பெற்றார்.
