/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபரை தாக்கிய மூவர் கைது 

வாலிபரை தாக்கிய மூவர் கைது 

வாலிபரை தாக்கிய மூவர் கைது 

வாலிபரை தாக்கிய மூவர் கைது 

வாலிபரை தாக்கிய மூவர் கைது 

ADDED : செப் 05, 2024 07:29 PM


Google News
நெட்டப்பாக்கம்:முன்விரோத்தில் வாலிபரை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த தட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திமுருகன், 25. இவர், நேற்று முன்தினம் இரவு மடுகரை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா, 21; பசுபதி, 23; சதீஷ், 24, ஆகியோர் முன்விரோத்தில் சக்தி முருகனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து புகாரின் பேரில், மடுகரை சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்குப் பதிந்து கிருஷ்ணா உட்பட மூன்று பேரையும் கைது செய்தார்.