ADDED : மே 04, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
: புதுச்சேரி: ஓவராக மது குடித்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 44; இவர் அதிக அளவில் மருந்து குடித்து வந்தார். இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் அவரை நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
