/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்தியால்பேட்டையில் குடிநீர் விநியோகம் கட் முத்தியால்பேட்டையில் குடிநீர் விநியோகம் கட்
முத்தியால்பேட்டையில் குடிநீர் விநியோகம் கட்
முத்தியால்பேட்டையில் குடிநீர் விநியோகம் கட்
முத்தியால்பேட்டையில் குடிநீர் விநியோகம் கட்
ADDED : ஜூன் 11, 2024 05:42 AM
புதுச்சேரி: பராமரிப்பு பணி காரணமாக முத்தியால்பேட்டை பகுதியில் வரும் 13ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்டம், செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி குடிநீர் உட்கோட்டம், வடக்கு பிரிவுக்கு உட்பட்ட காட்டாமணிக்குப்பம், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வரும் 13ம் தேதி மதியம் 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை புதுச்சேரி முத்தியால்பேட்டை முழுதும் சோலை நகர், கணேஷ் நகர், அங்காளம்மன் நகர், மஞ்சினி நகர், வ.உ.சி. நகர், வைத்திக்குப்பம், குருசுக்கப்பம், மாணிக்க முதலியார்தோட்டம், தெபேசன்ட்பேட், விஸ்வநாதன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இப்பணி நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.