Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண் உட்பட 3 பேரிடம் ரூ. 13.45 லட்சம் மோசடி

பெண் உட்பட 3 பேரிடம் ரூ. 13.45 லட்சம் மோசடி

பெண் உட்பட 3 பேரிடம் ரூ. 13.45 லட்சம் மோசடி

பெண் உட்பட 3 பேரிடம் ரூ. 13.45 லட்சம் மோசடி

ADDED : செப் 24, 2025 06:11 AM


Google News
புதுச்சேரி : பூராணங்குப்பத்தை சேர்ந்தவரிடம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதைநம்பி, மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 10 லட்சத்து 53 ஆயிரத்து 500 முதலீடு செய்துள்ளார். பின், அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், கொம்பாக்கத்தை சேர்ந்த பெண் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து 2 லட்சத்து 35 ஆயிரத்து 320, முத்தியால்பேட்டை சேர்ந்தவர் 57 ஆயிரம் என 3 பேர் மோசடி கும்பலிடம் 13 லட்சத்து 45 ஆயிரத்து 820 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us