Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாசமாக பேசிய 4 வாலிபர்கள் கைது

ஆபாசமாக பேசிய 4 வாலிபர்கள் கைது

ஆபாசமாக பேசிய 4 வாலிபர்கள் கைது

ஆபாசமாக பேசிய 4 வாலிபர்கள் கைது

ADDED : அக் 09, 2025 02:11 AM


Google News
அரியாங்குப்பம்: மது போதையில், பொதுமக்களை ஆபாசமாக பேசிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பொது இடத்தில் நின்று கொண்டு 3 வாலிபர்கள், பொதுமக்களை ஆபாசமாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று, மூவரையும் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், பூரணாங்குப்பத்தை சேர்ந்த அருள்குமார், 36; ஆனந்தராமன், 26; ஆபாவாணன், 36; என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அதே போன்று, அரியாங்குப்பம், காக்கையாந்தோப்பு பகுதியில் மது போதையில் ஆபாசமாக பேசிய, பாகூரை சேர்ந்த சரவணன், 41; என்பவரை அரியாங்குப்பம் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us