Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வாடகை வீட்டிற்கு போலி ஆவணம் தயாரித்தவர் மீது வழக்குப் பதிவு

வாடகை வீட்டிற்கு போலி ஆவணம் தயாரித்தவர் மீது வழக்குப் பதிவு

வாடகை வீட்டிற்கு போலி ஆவணம் தயாரித்தவர் மீது வழக்குப் பதிவு

வாடகை வீட்டிற்கு போலி ஆவணம் தயாரித்தவர் மீது வழக்குப் பதிவு

ADDED : பிப் 02, 2024 03:41 AM


Google News
புதுச்சேரி: வாடகை வீட்டிற்கு போலி ஆவணம் தயாரித்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, சண்முகாபுரத்தை சேர்ந்தவர் சீனுவாசன், 75. இவருக்கு சொந்தமான வீடு மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ., சாலையில் உள்ளது.

அந்த வீட்டில், மீனாட்சிபேட்டை சோழன் வீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 46, என்பவர் வாடகைக்கு தங்கியிருந்தார்.

சீனுவாசன் தனது வீட்டை, கிருஷ்ணமூர்த்திக்கு விற்றதுபோல, கிருஷ்ணமூர்த்தி போலி ஆவணம் தயாரித்தார்.

இது, சீனுவாசனுக்கு தெரியவர, அவர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us