ADDED : பிப் 01, 2024 11:29 PM
புதுச்சேரி: ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட ஏ.சி., மெக்கானிக் இறந்தார்.
புதுச்சேரி, ஆனந்தரங்கபிள்ளை வீதியை சேர்ந்தவர் குமரேசன்,51; ஏ.சி., மெக்கானிக். இவர் ரத்த அழுத்த நோய்க்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் சுயநினைவின்றி கிடந்தார். அவரது மனைவி அருகில் இருந்தவர்களின் உதவியுடன், அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். டி.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


