Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பூஜை நடத்தி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

பூஜை நடத்தி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

பூஜை நடத்தி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

பூஜை நடத்தி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

ADDED : ஜூன் 17, 2025 07:51 AM


Google News
புதுச்சேரி : மீன்பிடி தடைக்காலம் முடிந்து கங்கம்மா பூஜை நடத்தி, ஏனாம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

புதுச்சேரியில் கடந்த 14ம் தேதி தடைக்காலம் முடிவடைந்தது. மீன்பிடி தடைக்காலத்திற்கு பின் ஆந்திரா மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு முன்னர் ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர். அதையடுத்து, ஆந்திரா அடுத்த காக்கிநாடா பைரவ்பள்ளம், ஏனாம் கடலோர பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், கங்கம்மா பூஜையை வெகு விமர்சியாக நடத்தினர்.

இந்த பூஜையில், மீனவர்கள் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களும், மீனவ பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்த பூஜையில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக சென்று வர வேண்டியும் கலசத்தை தலையில் சுமர்ந்து சென்று வழிப்பட்டனர். அதனை தொடர்ந்து, ஏனாம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us