Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

ADDED : ஜன 30, 2024 06:16 AM


Google News
நெட்டப்பாக்கம் : நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற தலைப்பிலான மத்திய அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி கரையாம்புத்துார் திரவுபதியம்மன் கோவில் வளாகம் எதிரில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக, அமைச்சர் சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளின் மூலமாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில், விடுபட்ட பயனாளிகள் திட்டத்தில் சேர்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

இதில், பொது மக்கள் விண்ணப்பித்து பயடைந்தனர். தொடர்ந்து பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், குடிமைப் பொருள் வழங்கல் துறை தாசில்தார் அய்யனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us