தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் நடத்தை விதியை மீறிய தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

 தேர்தல் நடத்தை விதியை மீறிய தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

 தேர்தல் நடத்தை விதியை மீறிய தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு


ADDED : மே 02, 2026 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2026 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: தேர்தல் நடத்தை விதியை மீறி பேனர் வைத்த தி.மு.க., பிரமுகர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால், திருநள்ளாறு பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

திருநள்ளாறு வடக்கு வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த காதணி விழாவிற்கு தி.மு.க., கட்சி மூத்த தலைவர்கள் புகைப்படங்கள் மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் படங்களுடன் இரண்டு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

போலீசார் விசாரணையில் பொது இடத்தில் தேர்தல் நன்னடத்தை விதியை மீறி பேனர் வைத்துள்ள திருநள்ளாறு வடக்கு தெருவை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் பாலச்சந்தர், 47, என்பவர் மீது திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us