Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் 'பட்ஜெட்' முதல்வர் ரங்கசாமி பாராட்டு

நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் 'பட்ஜெட்' முதல்வர் ரங்கசாமி பாராட்டு

நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் 'பட்ஜெட்' முதல்வர் ரங்கசாமி பாராட்டு

நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் 'பட்ஜெட்' முதல்வர் ரங்கசாமி பாராட்டு

ADDED : பிப் 01, 2024 11:28 PM


Google News
புதுச்சேரி: நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என, பிரதமர், மத்திய நிதி அமைச்சருக்கு முதல்வர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று பார்லிமெண்ட்டில் தாக்கல் செய்த 2024-25ம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையானது, விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், ஏழை எளியோர் உள்ளிட்ட அனைவரின் வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீட்டு மாடிகளில் சோலார் பேனல் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம், நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் அமைக்கக் குழு, அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்ட விரிவாக்க திட்டம் சிறப்பானது.

தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்கும் இலக்கு நிர்ணயம், ஆன்மிக சுற்றுலா மூலம் வேலை வாய்ப்பை அதிகரிக்க திட்டம், வருமான வரி விதிப்பு விகிதங்களில் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பு போன்றவை அனைத்துத் தரப்பு மக்களையும் ஏற்றம் பெறச் செய்யும்.நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலான சிறப்பான பட்ஜெட்டினை சமர்ப்பிக்க வழிகாட்டுதலாக இருந்த பிரதமர் மோடி, பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு பாராட்டுகள்.

இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us