Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கூலித் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

கூலித் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

கூலித் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

கூலித் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

ADDED : ஜன 17, 2024 12:52 AM


Google News
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கத்தில் கூலித்தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செம்படப்பேட்டை புதுநகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 42; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் நெட்டப்பாக்கம் சென்றார். அப்போது கரியமாணிக்கம் பான்லேட் அருகில் சென்றபோது, அவரை பின் தொடர்ந்து வந்த நெட்டப்பாக்கம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சக்திவேல், 41; போலீஸ் வீதியைச் சேர்ந்த கார்த்தி, 39; ஆகியோர் சென்ற பைக் ஆறுமுகம் பைக்கை உரசியுள்ளது. இதனை தட்டிக்கேட்ட ஆறுமுகத்தை இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us