ADDED : பிப் 17, 2024 11:25 PM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ஜகன்மோகன், 28; கார் டிரைவர். இவர், பலரிடம் கடன் வாங்கியிருந்தார்.
கடன் கொடுத்தவர்கள் அவருக்கு தினமும், நெருக்கடி கொடுத்தனர். மன உலைச்சலில் இருந்த அவர், கடந்த 16ம் தேதி பூச்சு மருந்தை குடித்தார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


