ADDED : அக் 12, 2025 10:46 PM
புதுச்சேரி; வில்லியனுாரில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகில் உள்ள நிழற்குடையில் 60 வயது மதிக்கத் தக்க நபர் நேற்று முன்தினம் இறந்து கிடப்பதாக வில்லியனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடன் அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


