/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
ADDED : செப் 24, 2025 06:12 AM
புதுச்சேரி : முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் செலஸ்தீன் ஜெயமரிநாதன், 40; எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம் பெருமாள் பேட்டை தெருவில் உள்ள பெரிய பாளையத்தயம்மன் கோவிலில் நடந்து வரும் கொலு விழாவிற்கு, கோபுரத்தின் மீது ஏறி ஒலிபெருக்கி அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. கீழே விழுந்த ஜெயமரிநாதனை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, ஜெயமரிநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ஜான்சி அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.