/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம் சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
ADDED : அக் 23, 2025 06:35 AM

புதுச்சேரி: சாரம் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சாரம் முத்துவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, நாகமுத்துமாரியம்மன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
இதையொட்டி இரவு 7 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வரும் 3ம் தேதி வரை காலை, மாலை இருவேளையும் யாக சாலை பூஜை, இரவில் சாமி வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 27ம் தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹார உற்சவம், மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
28 ம் தேதி இரவு 7 மணிக்கு வள்ளி தேவசேனா - சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 31ம் தேதி மாலை 5 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், 3ம் தேதி காலை 8 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன் செய்துள்ளார்.


