Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.28.57 லட்சம் மோசடி

பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.28.57 லட்சம் மோசடி

பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.28.57 லட்சம் மோசடி

பகுதிநேர வேலை எனக்கூறி ரூ.28.57 லட்சம் மோசடி

ADDED : அக் 03, 2025 01:36 AM


Google News
புதுச்சேரி: முதலியார்பேட்டையை சேர்ந்த நபர் பகுதிநேரவேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, ரூ. 28.57 லட்சத்தை சைபர் மோசடி கும்பலிடம் இழந்தார்.

முதலியார்பேட்டையை சேர்ந்த நபரை,டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடுசெய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறிஉள்ளார்.

இதைநம்பி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 28 லட்சத்து 57 ஆயிரம் முதலீடு செய்து, அவருக்குகொடுக்கப்பட்ட பணிகளை முடித்து வந்துள்ளார்.

பின், அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்கமுயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.இதேபோல், தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் 25ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us