ADDED : அக் 12, 2025 10:48 PM
புதுச்சேரி; குட்கா பெருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் உதவி சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
வில்லியனுார் கனுவாப்பேட் அரசு பள்ளி அருகில் உள்ள கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது வி.மணவெளி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி 62, என்பவரது கடையில் குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் இருந்த ஹான்ஸ், கூல்லீப் உள்ளிட்ட 56 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


