ADDED : ஜன 23, 2024 04:35 AM

புதுச்சேரி : வில்லியனுார் அடுத்த மங்கலம் சாலை, உறுவையாறு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், 40; இவர் குடும்ப பிரச்னையில் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்துவந்தார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி விட்டு சென்றார். அன்று இரவு வரை வரததால் சந்தேகமடைந்து, அவரது மனைவி தமிழரசி, உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
, புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


