Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீஸ் மக்கள் மன்றத்தில் 35 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 35 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 35 புகார்களுக்கு உடனடி தீர்வு

போலீஸ் மக்கள் மன்றத்தில் 35 புகார்களுக்கு உடனடி தீர்வு

ADDED : அக் 05, 2025 11:00 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் நிலை யங்களில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதேபோல், கரையாம்புத்துாரில் எஸ்.பி.,செல்வம், மேட்டுப்பாளையத்தில் எஸ்.பி., ரகுநாயகம், ம ங்கலத்தில் எஸ்.பி., சுப்ரமணியன், போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் எஸ்.பி.,க்கள் ரச்சனா சிங், பக்தவசலம் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த் தி செய்தனர்.

இதில், பொது மக்களிடம் இருந்து 54 புகார்கள் பெறப்பட்டு, 35 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க, நிலைய அதிகாரிகளுக்கு, எஸ்.பி.,க் கள் உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us