ADDED : அக் 11, 2025 05:58 AM

திருக்கனுார் : புதுச்சேரி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் மண்ணாடிப்பட்டு தொகுதி சேர்ந்த முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர் உள்ளிட்டோர் மாதாந்திர உதவித்தொகை பெறுவ தற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருக்கனுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, 300 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத் தழகன், அ.தி.மு.க., நிர்வாகி சுத்துக்கேணி பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.


