Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்கால் பெண்ணிடம் 50 சவரன் நகை மோசடி

காரைக்கால் பெண்ணிடம் 50 சவரன் நகை மோசடி

காரைக்கால் பெண்ணிடம் 50 சவரன் நகை மோசடி

காரைக்கால் பெண்ணிடம் 50 சவரன் நகை மோசடி

ADDED : அக் 10, 2025 03:53 AM


Google News
காரைக்கால்: காரைக்காலில் பெண்ணிடம், தொழில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி, 50 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால், நிரவி ஊழியபத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மனைவி மகேஸ்வரி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இரு பிள்ளைகளுடன் மகேஸ்வரி தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் காரைக்கால், வலத் தெரு சேனியர் குளத்து வீதியை சேர்ந்த செந்தில்குமார், 44, என்பவர் மகேஸ்வரிக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அவர், இரும்பு கடை மற்றும் பட்டாசு கடை நடத்துவதாகவும், அதில் தொழில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக மகேஸ்வரியிடம் கூறியுள்ளார்.

அதை நம்பிய மகேஸ்வரி, செந்தில்குமாரிடம் 2017ம் ஆண்டு முதல் 50 சவரன் நகைகளை சிறுக சிறுக கொடுத்துள்ளார். அதை, செந்தில்குமார் பெற்று வங்கியில் அடமானம் வைத்தார்.

வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள 1 லட்சம் ரூபாயையும் வாங்கியுள்ளார். ஆனால், தொழிலில் மாதா மாதம் வரும் லாப பணத்தை செந்தில்குமார் தராமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து கேட்டபோது, மகேஸ்வரியிடம் செந்தில்குமார் தகராறு செய்துள்ளார்.

இதுக்குறித்து காரைக்கால் நகர போலீசில், மகேஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில், செந்தில்குமார் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us