பாரதிதாசன் கல்லுாரியில் சொற்பொழிவு
பாரதிதாசன் கல்லுாரியில் சொற்பொழிவு
பாரதிதாசன் கல்லுாரியில் சொற்பொழிவு
ADDED : ஜன 25, 2024 04:24 AM

புதுச்சேரி, : பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் தமிழ் - கொரிய மொழிகளுக்கிடையேயான ஒற்றுமைகள் குறித்து சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
தமிழ்த்துறை சார்பில் நடந்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ராஜி சுகுமார் தலைமை தாங்கினார். உதவிப்பேராசிரியர் சந்திரா வரவேற்றார்.
தமிழ்த்துறை தலைவர் சேதுபதி நோக்கவுரை நிகழ்த்தினார். உதவிப்பேராசிரியர் பட்டம்மாள் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
தென் கொரியா செஜோங் பல்கலை பேராசிரியர் ஆரோக்கியராஜ் சிறப்புரையாற்றினார்.


