Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவியை தாக்கிய கணவருக்கு வலை

மனைவியை தாக்கிய கணவருக்கு வலை

மனைவியை தாக்கிய கணவருக்கு வலை

மனைவியை தாக்கிய கணவருக்கு வலை

ADDED : ஜூன் 18, 2025 04:55 AM


Google News
அரியாங்குப்பம்: மனைவியை கட்டையால் தாக்கிய கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன், 59, இவர் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்ற அவருக்கும் மனைவி செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயராமன் மனைவியை தேங்காய் திருவும் மரக்கட்டையால், தாக்கி உள்ளார்.

அதில் காயமடைந்த, செல்வி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, அவரது மகன் சுமன் கொடுத்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து ஜெயராமனை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us