ADDED : செப் 29, 2025 12:47 AM
புதுச்சேரி: புதுச்சேரி குமாரபாளையம் விநாயகர் கோவில் அருகே வாலிபால் மைதானம் உள்ளது. அங்கு, அதே பகுதியைச் சேர்ந்த அறிவழகன், 38; என்பவர் லா ரியை நிறுத்தி இருந்தார்.
நேற்று முன்தினம் மதியம் அந்த லாரியை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது மைதானத்தில் படுத்திருந்த 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதில் அவர் தலை நசுங்கி அதே இடத்தில் இறந்தார். இறந்தவர் குறித்து விபரம் தெரியவில்லை.
வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


