/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எலி பேஸ்ட் சாப்பிட்ட மெக்கானிக் சாவு

எலி பேஸ்ட் சாப்பிட்ட மெக்கானிக் சாவு

எலி பேஸ்ட் சாப்பிட்ட மெக்கானிக் சாவு

எலி பேஸ்ட் சாப்பிட்ட மெக்கானிக் சாவு

எலி பேஸ்ட் சாப்பிட்ட மெக்கானிக் சாவு

ADDED : ஜூன் 21, 2025 06:26 AM


Google News
புதுச்சேரி : எலி பேஸ்ட் சாப்பிட்ட பைக் மெக்கானிக் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

முதலியார்பேட்டை அடுத்த வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார் மகன் ரவிச்சந்திரன், 24. இவர் பைக் மெக்கானிக் வேலை செய்து வந்தார். கடந்த 12ம் தேதி, எலி பேஸ்ட்டை சாப்பிட்டு, மயங்கி விழுந்தார். அவரை, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர், நேற்று இறந்தார்.

புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.