Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தீபாவளி 'கிப்ட்' எதிர்பார்த்த எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி! கவர்னரின் அனுமதி மறுப்பால் சிக்கல்

தீபாவளி 'கிப்ட்' எதிர்பார்த்த எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி! கவர்னரின் அனுமதி மறுப்பால் சிக்கல்

தீபாவளி 'கிப்ட்' எதிர்பார்த்த எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி! கவர்னரின் அனுமதி மறுப்பால் சிக்கல்

தீபாவளி 'கிப்ட்' எதிர்பார்த்த எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி! கவர்னரின் அனுமதி மறுப்பால் சிக்கல்

ADDED : அக் 14, 2025 05:30 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: தீபாவளிக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்வீட்-, பட்டாசு பாக்ஸ்கள் கவர்னரின் அனுமதி மறுப்பால் நிறுத்தப்பட்டது. புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் அரசியல்வாதிகள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் தொகுதி முக்கியஸ்தர்களுக்கு அன்பளிப்பு வழங்குவது வழக்கம். அதன்படி முதல்வர் ரங்கசாமி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் உள்பட உள்ள 33 எம்.எல்.ஏ.,க்களுக்கும் அமைச்சரவை செலவில் 'ஸ்வீட் மற்றும் பட்டாசு பாக்ஸ்களை வழங்கி வந்தார்.

இதில், எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 500 ஸ்வீட் பாக்ஸ், 500 பட்டாசு பாக்ஸ்களும் அமைச்சர்களுக்கு தலா1,000 பாக்ஸ்களும் வழங்கப்பட்டன. இந்த ஸ்வீட் மற்றும் பட்டாசு பாக்ஸ்களை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் கட்சி நிர்வாகிகள், தொகுதியில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு வழங்கி வந்தனர்.

இவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளாக ஸ்வீட், பட்டாசுகள் வழங்கப்பட்டு வந்ததது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உளளதால், இந்த தீபாவளி பண்டிகைக்கு தங்கள் ஆதரவாளர்களுக்கு 'ஸ்வீட் மற்றும் பட்டாசுகள் கொடுத்து மகிழ்விக்க எம்.எல்.ஏ.,க்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்தாண்டு வழங்கப்பட்ட ஸ்வீட் பாக்ஸ்களுக்கான 90 லட்சம் ரூபாயை மட்டும் ஸ்வீட் வழங்கிய நிறுவனத்திற்கு வழங்க கவர்னர் அனுமதி அளித்தார்.

கான்பெட் நிறுவன மூலம், தனியார் பட்டாசு நிறுவனத்தில் இருந்து வாங்கி கொடுத்த பட்டாசுகளுக்கான ரூ 4 கோடிக்கான கோப்பிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் அனுமதி தராமல், திருப்பி அனுப்பிவிட்டார். இதனால், கான்பெட் நிறுவனத்திற்கு ரூ.4 கோடி வழங்கப்படாமல் உள்ளது.

அதனால் இந்த ஆண்டும் கவர்னரின் அனுமதி கிடைக்காது என்பதால் வரும் தீபாவளிக்கு ஸ்வீட்- பட்டாசு பாக்ஸ்கள் எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

ஒருவேளை கவர்னர் கைலாஷ்நாதனிடம் எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து ஸ்வீட், பட்டாசுகள் வழங்க அனுமதி பெற்றாலும், இவற்றை தீபாவளிக்கு முன்பாக கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளது. வரும் சட்டசபை தேர்தலை கணக்கிட்டு, தொகுதியில் உள்ள தங்கள் ஆதரவாளர்களை ஸ்வீட், பட்டாசு பாக்ஸ்களை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தலாம் என்ற நினைப்பில் இருந்த எம்.எல்.ஏ., கள் கவர்னர் அதிரடியால், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us