ADDED : பிப் 12, 2024 06:34 AM
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை கிராமத்தில் உள்ள மரகதவல்லி உடனுறை மரக்காளீஸ்வர் கோவிலில், நேற்று சோமவரம் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி காலை 10:00 மணிக்கு மரக்காளீஸ்வரருக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு சோமவரம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் மடுகரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் பல்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.