ADDED : ஜன 20, 2024 06:02 AM

புதுச்சேரி : தாயை காணவில்லை என மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
முதலியார்பேட்டை அடுத்த நைனார்மண்டபம், திவான் கந்தப்ப முதலியார் நகர், நேதாஜி வீதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி சிவகாமி, 60. இவர் சில நாட்களாக மனவிரக்தியில் இருந்தார். கடந்த 16ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது மகன் விஜயேந்திரன் புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


