Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மீனவரை தாக்கிய நால்வருக்கு வலை

மீனவரை தாக்கிய நால்வருக்கு வலை

மீனவரை தாக்கிய நால்வருக்கு வலை

மீனவரை தாக்கிய நால்வருக்கு வலை

ADDED : ஜன 27, 2024 06:27 AM


Google News
புதுச்சேரி : புதுக்குப்பத்தில் மீனவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன், 37; மீனவர். இவரது தந்தை செல்வபெருமாள் உட்பட நான்கு பேர் கூட்டாக சேர்ந்து வாங்கிய பைபர் படகை, புதுக்குப்பம் கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

அந்த படகை பார்க்க நேற்று முன்தினம் இரவு லட்சுமணன் சென்றபோது, அதே ஊரைச் சேர்ந்த ராஜவேலு, 36, மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் படகு மீது அமர்ந்து மது குடித்தனர். இதை தட்டிக்கேட்ட லட்சுமணனை, ராஜவேலு உட்பட நால்வரும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து ராஜவேலு உட்பட நால்வரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us