Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தடுப்பு வேலி அமைக்க எதிர்ப்பு

தடுப்பு வேலி அமைக்க எதிர்ப்பு

தடுப்பு வேலி அமைக்க எதிர்ப்பு

தடுப்பு வேலி அமைக்க எதிர்ப்பு

ADDED : ஜன 21, 2024 04:29 AM


Google News
திருபுவனை: திருபுவனை அருகே தடுப்பு வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணி நடந்தது. இதில் திருபுவனை மேம்பாலத்திற்கு வடக்கு பகுதியில் சர்வீஸ் சாலையையொட்டி, 7 மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் செல்ல வசதியாக 'யூ' டர்ன் அமைக்கப்பட்டிருந்தது. இவ்வழியை பொது மக்கள், வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர்.

அந்த வழியை அடைத்து இரும்பு தடுப்புகள் அமைக்க சாலை பணியாளர்கள் நேற்று பகல் 12:00 மணியளவில் அங்கு பள்ளம் தோண்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து தடுப்பு வேலி அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால், பொது மக்கள் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us