ADDED : மார் 06, 2026 04:11 AM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் பகுதியில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.
புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, துணை ராணுவத்தினர் வருகை தந்துள்ளனர். புதுச்சேரியில் பதட்டமான ஓட்டுச்சாவடி பகுதியில் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் பகுதியில், நேற்று மாலை துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.
பதட்டமான ஓட்டுச்சாவடி பகுதியான அரியாங்குப்பம், காக்கையாந்தோப்பு, ஆர்.கே., நகர், பி.சி.பி., நகர், அம்பேத்கர் நகர் வழியாக வீராம்பட்டினம் வரை சென்றனர். அவர்களுடன், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சென்றனர்.


