Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சண்டே மார்க்கெட்டில் குவிந்த மக்கள் 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சண்டே மார்க்கெட்டில் குவிந்த மக்கள் 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சண்டே மார்க்கெட்டில் குவிந்த மக்கள் 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சண்டே மார்க்கெட்டில் குவிந்த மக்கள் 

ADDED : அக் 13, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொருட்கள் வாங்க, நேரு வீதி, சண்டே மார்க்கெட்டில் நேற்று பொது மக்கள் அதிகளவில் குவிந்தனர்.

புதுச்சேரி நகரப்பகுதியில் வாரந்தோ றும் ஞாயிற்றுக்கிழ மைளில் சண்டே மார்க் கெட் நடந்து வருகிறது. இங்கு, வீட்டிற்கு தேவையான அனைத்து அத்தியாவ சிய பொருட்களும் விற்பனை செய்யப்ப டுகிறது.

புதுச்சேரி நகரின் மிக முக்கிய வீதியான காந்தி வீதி, நேரு வீதியின் இருபுறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஒருநாள் மட்டும் வியாபாரம் செய்யப் படுகிறது.

இங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் சண்டே மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது, தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க சண்டே மார்க்கெட்டில் மக்கள் அதிகளவில் நேற்று குவிந்தனர்.

இதனால், குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, காந்தி வீதி மற்றும் நேரு வீதிகளில் அதிக அளவில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us