Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிரைவர் சாவு போலீசார் விசாரணை

டிரைவர் சாவு போலீசார் விசாரணை

டிரைவர் சாவு போலீசார் விசாரணை

டிரைவர் சாவு போலீசார் விசாரணை

ADDED : செப் 01, 2025 11:09 PM


Google News
புதுச்சேரி: சாராயக்கடையில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லியனுார் துத்திப்பட்டு மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் குமார், 55; டிரைவர். குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தொண்டமாநத்தம் சாராயக்கடையில் குமார் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி மலர் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us