Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பி.எஸ்.என்.எல்., முகாம் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., முகாம் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., முகாம் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., முகாம் நாளை துவக்கம்

ADDED : பிப் 25, 2024 04:15 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம், நாளை துவங்குகிறது.

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., முதன்மை மேலாளர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம், நாளை 26ம் தேதி முதல் வரும் 29ம் தேதி வரை, நான்கு நாட்கள் நடக்கிறது.

முகாம், மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை போஸ்ட் ஆபீஸ் அலுவலகம் அருகில், வில்லியனுார் மூப்பனார் காம்ப்ளெக்ஸ் அருகில், திருக்கனுார், கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி அருகில், மதகடிப்பட்டு, கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி அருகில், ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுடைய எண்ணை மாற்றாமல் அதிவேக எப்.டி.டி.எச்., தொழில் நுட்பத்திற்கு லேண்ட்லைன் எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம். அதற்கான மோடம் இலவசம்.

புதிய எப்.டி.டி.எச் இணைப்பு, ரூ.329 முதல் கிராமப்புறங்களுக்கு, ரூ.999க்கு கிடைக்கும். ரூ.269 மதிப்புள்ள சிம்கார்டு ரூ.50க்கு வழங்கப்படுகிறது.

இந்த சிம்கார்டில், 45 நாட்களுக்கு தினசரி 2 ஜி.பி., டேட்டா, அளவில்லா அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., இலவசம். பிற நெட்வொர்க்கில் இருந்து எம்.என்.பி., மூலம், பி.எஸ்.என்.எல்.,க்கு வருபவர்களுக்கு ரூ.269 மதிப்புள்ள, சிம் இலவசம். 2ஜி, 3ஜி சிம் வைத்திருப்பவர்கள், இலவசமாக, 4ஜி சிம்மிற்கு மேம்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us