Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜெர்மனியில் வேலை உள்ளதாக கூறி புதுச்சேரி நபரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

ஜெர்மனியில் வேலை உள்ளதாக கூறி புதுச்சேரி நபரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

ஜெர்மனியில் வேலை உள்ளதாக கூறி புதுச்சேரி நபரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

ஜெர்மனியில் வேலை உள்ளதாக கூறி புதுச்சேரி நபரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

ADDED : அக் 06, 2025 01:41 AM


Google News
புதுச்சேரி: ஜெர்மனியில் வேலை வாய்ப்பு உள்ளதாக கூறி, புதுச்சேரி நபரிடம் ரூ. 2.24 லட்சத்தை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.

எல்லைபிள்ளைச்சாவடியை சேர்ந்தவர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார். இதையடுத்து, அதிலிருந்த மொபைல் எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய நபர் ஜெர்மனியில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அந்த வேலைக்கு விசா மற்றும் விமான டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார்.இதைநம்பி, மர்ம நபருக்கு ரூ. 2 லட்சத்து 24 ஆயிரம் அனுப்பினார்.

அதன்பின் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.இதேபோல், மணவெளியை சேர்ந்தவர் 19 ஆயிரத்து 700, உருளையன்பேட்டையை சேர்ந்த பெண் 35 ஆயிரத்து 256, லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 25 ஆயிரம் என, 4 பேர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 3 ஆயிரத்து 956 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us