ADDED : மே 07, 2026 03:41 AM

புதுச்சேரி: ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை திடலில் நடந்தது.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் தென் பாரதம் (கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி) மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா பள்ளியில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்பு ஊர்வலம் புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நேற்று மாலை நடந்தது. ஊர்வலம் காந்தி சிலை அருகே தொடங்கி கடற்கரை சாலை, பாரதி பூங்கா, எஸ்.வி.படேல் சாலை, காந்தி வீதி வழியாக மீண்டும் கடற்கரைக்கு வந்து நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., முகாம் தலைவர் பிரகாஷ், துணைத் தலைவர் செல்வராஜ், நகர தலைவர் தாமோதரன், வரவேற்பு குழு தலைவர் கபிலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த அணிவகுப்பில் 190 பேர் பங்கேற்றனர். பயிற்சி முகாம் வரும் 15ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
