ADDED : ஏப் 18, 2025 04:14 AM
அ நிறம் | அளவு
பாகூர்: புதுச்சேரி இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடந்த சிறப்புக்கூறு நிதி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு புத்திஸ்ட் சொசைட்டி தலைவர் புனிதசீலன் துவக்கி வைத்தார். எஸ்.சி., எஸ்.டி., சிறப்புக்கூறு நிதி குறித்து, இந்திய குடியரசு கட்சி புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் கலைவாணன் பேசினார். புதுச்சேரி யாழ் அரங்கம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தயாரிப்பில், முனைவர் கோபி இயக்கத்தில், 'மயான காண்டம்' நாடகம் நடந்தது. இந்திய குடியரசு கட்சி பொறுப்பாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


