Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைகளின் வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்வு; கேள்விக்குறியாகும் சொந்த வீடு கனவு

மனைகளின் வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்வு; கேள்விக்குறியாகும் சொந்த வீடு கனவு

மனைகளின் வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்வு; கேள்விக்குறியாகும் சொந்த வீடு கனவு

மனைகளின் வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்வு; கேள்விக்குறியாகும் சொந்த வீடு கனவு

ADDED : ஜூன் 20, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
பாகூர்: புதுச்சேரியில் நிலம் மற்றும் மனைகளின் அரசின் வழிகாட்டி மதிப்பு திடீரென பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், ஏழைகளின் சொந்த வீடு கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

புதுச்சேரியில் நிலம், மனை விற்கப்படும்போது, பத்திர பதிவு அலுவலங்களில் அரசுக்கு 10 சதவீத முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வருவாயை, வளர்ச்சி பணிக்காக, பத்திர பதிவு துறையும், உள்ளாட்சி துறையும் 5 சதவீதம் என்ற விகிதத்தில் பிரித்துக் கொள்ள வேண்டும்.

புதுச்சேரியில் பெரிய தொழிற்சாலை எதுவும் இல்லாததால், அரசின் வருவாய் கலால், வணிகவரி, பத்திரப்பதிவு, வாகனப் பதிவுகளையை சார்ந்துள்ளது. இதில், வரும் வருவாயை கொண்டே அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதற்காக, அரசு ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 1ம் தேதி முதல் நிலம் மற்றும் மனைகளின் அரசின் வழிகாட்டு மதிப்புகளை உயர்த்துவது வழக்கம். ஆனால், புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக நிலம் மற்றும் மனைகளின் வழிகாட்டி விலை உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில் புதுச்சேரி அரசு, எதிர்வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக வருவாயை பெருக்கிட மதுபானங்களின் மீதான விலையை சமீபத்தில் உயர்த்தியது. அதனை தொடர்ந்து, சொத்து வழிகாட்டி மதிப்பையும் தற்போது பல மடங்காக உயர்த்தி உள்ளது.

பாகூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெட்டப்பாக்கம், மடுகரை, ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம் பகுதியில் சதுர அடி மனை விலை ரூ.170 முதல் 200 ஆக இருந்த அரசின் வழிகாட்டு மதிப்பு தற்போது, ரூ.600 முதல் 1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில் சதுர அடி மனை விலை ரூ.160 முதல் 270 என இருந்த அரசின் வழிகாட்டி மதிப்பு தற்போது திடீரென ரூ.500 முதல் 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வில்லியனுார் நகரப் பகுதியில் ஏற்கனவே சதுர அடி அரசு வழிகாட்டு மதிப்பீட்டு தொகை ரூ.270 முதல் 440 வரை இருந்தது. அது தற்போது ரூ.1,500 முதல் 2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, கிராமப்பகுதியான தொண்டமாநத்தம் பிர்வாகவில் ரூ.80 முதல் 100 வரை இருந்த அரசு வழிகாட்டு மதிப்பு தொகை தற்போது ரூ.500 முதல் 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று நகரப்பகுதியிலும் மனைகளின் வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மனைகளின் வழிகாட்டி மதிப்பு திடீரென மூன்று முதல் ஆறு மடங்கு வரை உயர்த்தப்பட்டிருப்பது, சொந்த வீடு கனவில் இருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, அரசின் வழிகாட்டி மதிப்பை காட்டிலும், பல மடங்கு கூடுதலான விலைக்குத் தான் நிலம், மனைகள் விற்பனை செய்யப்படுகிறது. கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, ஆட்கள் சம்பளம் உயர்வு போன்ற காரணங்களால் ஏழை மக்களின் சொந்த வீடு என்பது கனவாகவே உள்ளது.

இந்நிலையில், தற்போது, மனைகளின் சொத்து வழிகாட்டி மதிப்பை அரசு பல மடங்காக உயர்த்தி இருப்பது, ஏழைகளின் தலையில் இடியை இறக்கி வைத்தது போல் உள்ளது. இது, அவர்களின் சொந்த வீடு கனவையே கேள்விக்குறியாக்கியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us