Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சத சண்டி மகா ேஹாமம் நாளை மறுநாள் துவக்கம்

சத சண்டி மகா ேஹாமம் நாளை மறுநாள் துவக்கம்

சத சண்டி மகா ேஹாமம் நாளை மறுநாள் துவக்கம்

சத சண்டி மகா ேஹாமம் நாளை மறுநாள் துவக்கம்

ADDED : செப் 20, 2025 07:16 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நடைபெறும் சாரதா நவராத்திரி சத சண்டி மகாேஹாமம் வரும் 22ம் தேதி துவங்குகிறது.

புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், கடந்த 5 ஆண்டுகளாக சாரதா நவராத்திரியில் சத சண்டி மகா ேஹாமம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 6ம் ஆண்டிற்கான சத சண்டி மகா ேஹாமம் வரும் 22ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை, லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடக்கிறது.

தினசரி காலை 7:00 மணிக்கு கோ பூஜை, அஸ்வ பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவாவரண பூஜை ஆகியவைகளுடன் ஆரம்பித்து வேதிகார்ச்சனை, சப்தசதி பாராயணம், சப்தசதி ஹோமம், மஹாபூர்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடைபெறும்.

சப்தசதி பாராயண ஹோமத்தின்போது அத்யாயத்திற்கு ஒன்று என, 13 அத்யாயங்களுக்கு 13 புடவைகள், மங்கல பொருட்கள், பழங்கள் 13 முறை ஆஹூதி செய்யப்பட்டு மஹா பூர்ணாஹூதியில் பட்டுப்புடவை, திருமங்கல்யம், மூலிகை பொருட்கள் சேர்த்து, தீபாராதனை, மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.

மாலை 5:00 மணிக்கு லலிதா சஹஸ்ரநாமம், 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வேதிகார்ச்சனை, மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி, சதுர்வேத உபசாரம் நடைபெற்று மாலை கலை நிகழ்ச்சி, உபன்யாசம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us