தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கத்தியுடன் திரிந்த இரண்டு பேர் கைது

கத்தியுடன் திரிந்த இரண்டு பேர் கைது

கத்தியுடன் திரிந்த இரண்டு பேர் கைது


ADDED : ஜூலை 30, 2025 07:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 07:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார் : வில்லியனுார் அருகே கொலை செய்ய கத்தியுடன் திரிந்த டிரைவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராதா மகன் கேசவன், 33. இவருக்கு இரண்டு மனைவிகள். டிரைவரான இவர், சென்னையில் முதல் மனைவியுடன் தங்கி, கார் ஓட்டி வருகிறார்.

தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள இரண்டாவது மனைவியுடன் அதே பகுதியை சேர்ந்த நபருடன் உறவு வைத்திருப்பதாக கேசவனுக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து, சென்னையில் இருந்து தனது நண்பர் சூர்யா, 22, என்பவருடன் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த அந்த நபரை இரவு 11:00 மணியளவில் நண்பருடன் சேர்ந்து கத்தியுடன் கொலை செய்யும் நோக்கத்தில் துரத்தினர்.

தகவலறிந்த வில்லியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போதுகத்தியுடன் திரிந்த கேசவன் மற்றும் சூரியாவை கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு இருவர் மீதும் வழக்குப் பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us