Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அதிக மது குடித்த டைலர் சாவு

அதிக மது குடித்த டைலர் சாவு

அதிக மது குடித்த டைலர் சாவு

அதிக மது குடித்த டைலர் சாவு

அதிக மது குடித்த டைலர் சாவு

ADDED : பிப் 11, 2024 10:36 PM


Google News
அரியாங்குப்பம்: அதிகமாக மது குடித்த டைலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.

அரியாங்குப்பம், பி.சி.பி., நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 48; இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனது அண்ணன் வீட்டில் தங்கி, டைலர் வேலை செய்து வந்தார். வயிற்று வலிக்கு மருந்து சாப்பிட்டு வந்தார்.

நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை நேற்று அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.